சிரங்கு நோய் குணமடைய
Cure For Eczema
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ (Two-way Video Conferencing) அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
1. பத்மாஸனம்
2. ஸமானகும்பகம்
3. ஊர்த்வஜகும்பகம்
4. சந்த்ரகும்பகம்
5. பஹி:கும்பகம்
1. பத்மாஸனம்,
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33 (விரிவாக்கு) அத பத்மாஸனம்
உத்தானௌ சரணௌ க்ரு'த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு'த்வா து தாத்ரு'சௌ' // 2.31
த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /
துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33
மொழிபெயர்ப்பு
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)
செய்நுட்பம்- வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
- இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
- வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும்.
- மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
- முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுக்கவும்.
- இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
- முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமரவும்.
2. பத்மாஸனத்தில் இருந்தபடியே
ஸமானகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 62 (விரிவாக்கு)
அத ஸமானகும்பக:
நாபாவாபூர்ய வாயுச்'சேத் தேஹே வ்யாப்ய விதாரித: /
கும்பிதே ஜ்வலனம் த்யாயேத் ஸமானஸ்ய து கும்பக: // 62
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதியைச் சுவாசத்தால் நிரப்பி, அதை உடல் முழுக்க பரப்பியபின், நெருப்பில் கவனத்தைச் செலுத்தும் இந்தக் கும்பகம் ஸமானகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்- தொப்புள் பகுதி நிரம்புமாறு சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுக்கவும்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, அது உடல் முழுக்க பரவுவதாக பாவனை செய்யவும்.
- பிறகு தொப்புள் பகுதியில் நெருப்பு இருப்பதைப் போன்று பாவனை செய்யுங்கள்.
- உங்களால் இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிடவும்.
- இதனை 21 முறைகள் செய்யவும்.
3. பத்மாஸனத்தில் இருந்தபடியே
ஊர்த்வஜ கும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 54, 55 (விரிவாக்கு) அத ஊர்த்வஜ கும்பக:
க்ரு'காடிகா-ப்ரு'ஷ்ட-பார்ஷ்ணி-ப்ரு'ஷ்டாந்தேஷு ஸ்தித: ச'சி' /
ரேசகாப்யாஸ-பாஹுல்யாத் க்ரமாத்-ஸ்தான-நியோகத: // 54
ஊர்த்வோர்த்வம்-இத்யபானஸ்ய கும்பகோர்த்வஜ-ஸம்ஜ்நித: /
பரகாய-ப்ரவேச': ஸ்யாத்கடிகாத்விதயோன்மிதே // 55
மொழிபெயர்ப்பு
கழுத்து, முதுகு, குதிகால் மற்றும் கீழ்முதுகு ஆகிய பகுதிகளில் சந்திர சக்தி இருக்கிறது. தொடர்ந்து ரேசகத்தைப் பயிற்சி செய்வதும், அபானாவை ஒவ்வொரு இடமாக பாவனை செய்வதுமே ஊர்த்வஜ கும்பகா எனப்படும். ஒருவர், இதனை இரண்டு கடிகா (48 நிமிடங்கள்) பயிற்சி செய்தால், அவருக்குப் பரகாய ப்ரவேச ஸித்தி வாய்க்கும் (இன்னொரு உடலுக்குள் செல்லும் வல்லமை).
செய்நுட்பம்- சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்தளவு நேரம் உள்ளே நிறுத்தவும்.
- சுவாசத்தை வெளிவிடும் போது, முதுகெலும்பின் நுனிப்பகுதியில் (மூலாதாரம்) சந்திரனை பாவனை செய்யவும்.
- மீண்டும் சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்தளவு நேரம் உள்ளே நிறுத்தவும். இம்முறை சுவாசத்தை வெளியேற்றும்போது ஸ்வாதிஷ்டானப் பகுதியில் சந்திரனை பாவனை செய்யவும்.இவ்வாறு ஸஹஸ்ரார சக்கரம்வரை ஒவ்வொரு சக்கரமாக பாவனை செய்யவும்.
4. பத்மாஸனத்தில் இருந்தபடியே
சந்த்ரகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 4 (விரிவாக்கு) அத சந்த்ரகும்பக:
அபானேனோன்முக: வாயுரந்தச்'சாந்த்ர:கும்பக: /
யஸ்மின்ஸ்திதௌ ஸாக்ஷிமாத்ரே ப்ரணாபானஜயோதயௌ /41
மொழிபெயர்ப்பு
அபான வாயுவின் காரணமாக பிராண வாயு மேல்நோக்கி நகரும்போது, அது சந்த்ரகும்பகம் என்றழைக்கப்படுகிறது. இக்கும்பகத்தில் நிலைபெறும்போது ஸாக்ஷியாக இருக்கும் ஒருவர் பிராண, அபான வாயுக்களைக் கட்டுப்படுத்தும் திறனையும் அடைகிறார்.
செய்நுட்பம்- ஆழமாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.
- அப்போது மூல பந்த முத்ராவைச் செய்யவும். (இடது குதிகாலை ஆஸனவாய் மேல் வைத்து அழுத்தி, ஆஸனவாயை இறுக்கிச் சுருக்கிக்கொள்ள வேண்டும்.)
- உங்களால் இனி சுவாசத்தை உள்நிறுத்த முடியாது எனும்போது, மூல பந்த முத்ராவை விடுவித்துவிட்டுத் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும்.
- இதை 21 முறைகள் செய்யவும்.
5. பத்மாஸனத்தில் இருந்தபடியே
பஹி:கும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31 (விரிவாக்கு) அத பஹி:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.
செய்நுட்பம்- மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
- எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்தவும்.
- பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- இதை 21 முறைகள் செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.