செரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க
Care For Digestive Disorders
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
1. பச்’சிமோத்தான-ஆஸனம்
2. நாககும்பகம்
3. ஸமானகும்பகம்
4. த்ரிசூ’லகும்பகம்
5. த்ரிநேத்ரகும்பகம்
6. கபாலபாதி ப்ராணாயாமம்
7. பஸ்த்ரிகாகும்பகம்
1. பச்’சிமோத்தான-ஆஸனம்
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 26 (விரிவாக்கு)
அத பச்’சிமோத்தான-ஆஸனம்
ப்ரஸார்ய பாதௌ புவி தண்டரூபௌ ஸம்ந்யஸ்த-பாலம் சிதியுக்ம-மத்யே/
யத்னேன பாதௌ ச த்ரு’தௌ கராப்யாம் யோகீந்த்ர-பீடம் பச்’சிமோத்தானமாஹு: // 2.26
மொழிபெயர்ப்பு
கால்களை ஒரு குச்சியைப் போல விரைப்பாகத் தரையில் நீட்டி, குதிங்கால்களை ஒன்றையொன்று தொடாமல் வைத்துக் கொண்டு, முன்னால் குனிந்து நெற்றியை முழங்கால் மேல் வைத்து, பாதங்களைக் கைகளால் பிடித்துக் கொள்ளும் இந்நிலை பச்சிமோத்தான ஆஸனம் எனப்படுகிறது.
செய்நுட்பம்- கால்களை நீட்டி அமருங்கள். குதிங்கால்கள் ஒன்றையொன்று தொட வேண்டாம்.
- முடிந்தளவு முன்னால் வளைந்து, நெற்றியை முழங்கால்களின் மேல் வைக்கவும் (முழங்கால்களை மடக்க வேண்டாம்).
- பாதங்களைக் கைகளால் பிடித்துக்கொள்ளவும்.
2. பச்’சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே
நாககும்பக:,
அத நாககும்பக:
ஓதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: /
தம் ரோகயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு’டம் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி’வோதித: /
க்ஷுதாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- பின் தாடையை நெஞ்சின் மீது வையுங்கள்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறைகள் செய்யுங்கள்.
3. பச்’சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே
அத ஸமானகும்பக:
நாபாவாபூர்ய வாயுச்’சேத் தேஹே வ்யாப்ய விதாரித: /
கும்பிதே ஜ்வலனம் த்யாயேத் ஸமானஸ்ய து கும்பக: // 62
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதியைச் சுவாசத்தால் நிரப்பி, அதை உடல் முழுக்க பரப்பியபின், நெருப்பில் கவனத்தைச் செலுத்தும் இந்தக் கும்பகம் ஸமானகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்- தொப்புள் பகுதி நிரம்புமாறு சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுக்கவும்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, அது உடல் முழுக்க பரவுவதாக பாவனை செய்யவும்.
- பிறகு தொப்புள் பகுதியில் நெருப்பு இருப்பதைப் போன்று பாவனை செய்யுங்கள்.
- உங்களால் இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிடவும்.
- இதனை 21 முறைகள் செய்யவும்.
4. பச்’சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே
த்ரிசூ’லகும்பக:,
அத த்ரிசூ’லகும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதை 21 முறைகள் செய்யவும்.
5. பச்’சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே
த்ரிநேத்ரகும்பக:,
அத த்ரிநேத்ரகும்பக:
ஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதை 21 முறைகள் செய்யவும்.
6. பச்’சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே கபாலபாதி ப்ராணாயாமம்,
யோக ரஹஸ்யம், அத்யாயம் 1, ஸ்லோகம்- 100 செய்நுட்பம்- வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடவும்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
- உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
- இதை 21 முறைகள் செய்யவும்.
7. பச்’சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே
பஸ்த்ரிகாகும்பக:,
அத பஸ்த்ரிகாகும்பக:
பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபூரௌ ச்’ரமாவதி/
வேகேன ஸ்தனயோரூர்த்வம் தத: பூரோsர்க-வர்த்மனா // 164
ஜாலந்தரம் த்ரு’டம் பத்த்வா கும்பிதம் சந்த்ர-வர்த்மனா /
ரேசயேத் பஸ்த்ரிகாகும்ப: ச’ரீராக்னிவிவர்த்தன: // 165
மொழிபெயர்ப்பு
ஒருவர், தாம் களைப்படையும்வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும். இந்த பஸ்த்ரிகாகும்பகம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.
செய்நுட்பம்- கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுக்கவும்.
- உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்தவும். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
- உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்தவும்.
- இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறைகள் செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.