by tamilkriyaupdate | Mon, 2014-02-10 12:33
மனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியாCure for Depression உரிமை மறுப்பு (Disclaimer) இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம். முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது. இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பு: கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது. கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும். பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- பத்மாஸனம்
- சீ’தலீகும்பகம்
- பஸ்த்ரிகாகும்பகம்
1. பத்மாஸனம்,கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 8 (விரிவாக்கு) அத பத்மாஸனம் வமோரூபரி தக்ஷிணம் ஹி சரணம் ஸம்ஸ்தாப்ய வாமம் ததா தகே்ஷாரூபரி பச்’சிமேன விதினா க்ரு’த்வா கராப்யாம் த்ரு’டம் / அங்குஷ்டௌ ஹ்ரு’தயே நிதாய சிபுகம் நாஸாக்ரமாலோகயே - தேதத்-வ்யாதி-விநாச’காரணபரம் பத்மாஸனம் ப்ரோசயதே // 8
மொழிபெயர்ப்பு வலது காலை இடது தொடையிலும், இடது காலை வலது தொடையிலும் வைத்து, கைகளை முதுகுப்புறத்தில் குறுக்காக மடித்து, வலது கையால் வலது கால் பெருவிரலையும், இடது கையால் இடது காலின் பெருவிரலையும் பிடிக்கவும். முகவாய்க்கட்டையில் மார்பில் பதித்து, மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும். இது பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படுகிறது. இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது.
செய்நுட்பம்- வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
- இப்பொழுது இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
- கைகளைப் பின்பக்கத்தில் குறுக்காக வைக்கவும்.
- வலது கால் பெருவிரலை வலது கையாலும், இடது கால் பெருவிரலை இடது கையாலும் பிடிக்கவும்.
- தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
- மூக்கின் நுனியைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
- முகவாய்க் கட்டையைத் தளர்த்தவும்.
2. பத்மாஸனத்தில் இருந்தபடியே சீ’தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு) அத சீ’தலீகும்பக: ஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் / அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 74
மொழிபெயர்ப்பு வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம் - கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, அதே ஆஸனத்தில் அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
3. பத்மாஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும்பக:, அத பஸ்த்ரிகாகும்பக: பஸ்த்ரைவ லௌஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் / ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 75
ஏவம் விம்ச’திவாரம் ச க்ரு’த்வா குர்யாச்சகும்பகம் / ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 76
த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸுதீ: / ந ச ரோகோ ந ச க்லேச’ ஆரோக்யம் ச தினே தினே // 77
மொழிபெயர்ப்பு கொல்லனின் உலைக்களத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (75)
இவ்வாறு 20 முறை செய்யவும். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்தவும். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (76-77)
செய்நுட்பம் - தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
- சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யவும்.
- 21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுக்கவும். சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்தவும். உங்களால் இனி முடியாது எனும்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும்.(2லிருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
- இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.
|