இருமனக் குழப்ப நோயைத் தீர்க்க
Cure for Bipolar Disorder
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
1. மீடகீ பாவ ஆஸனம்
2. புஜங்கி கர்ணகும்பகம்
3. ம்ருத்ய பஞ்ஜக ஆஸனம்
4. புயங்கமகும்பகம்
5. நாகீபாவ ஆஸனம்
6. த்ராடககும்பகம்
7. நக்ர ஆஸனம்
8. சூ’ன்யககும்பகம்
1. மீடகீ பாவ ஆஸனம்,
அத மீடகீ பாவ ஆஸனம்
ஆஸண கௌ குண குலமை பாய ஜாஈ / 102
செய்நுட்பம்- முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போட்டு, வஜ்ராஸனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
- கைவிரல்களைக் கோர்த்துக் கொள்ளவும்.
- உடம்பின் ஏதேனும் ஒரு பக்கமாகக் கைகளைத் தரையில் ஊன்றவும்.
- முழங்கால்கள் மட்டும் தரையில் இருக்க, பின்னங்கால்களைத் தூக்கி, முன்னோக்கிக் குனிந்து தலையால் தரையைத் தொடவும்.
- பின்னங்கால்கள் தரையைத் தொடாமல் உங்கள் உடம்போடு ஒட்டி இருக்கட்டும்.
2. மீடகீ பாவ ஆஸனத்தில் இருந்தபடியே
புஜங்கி கர்ணகும்பக:,
ஹட ரத்னாவலீ அத்யாயம் 2, ஸ்லோகம் 32
செய்நுட்பம் - தொண்டைப் பகுதியில் உங்கள் விழிப்புணர்வை வைத்து, சுவாசத்தைத் தொண்டை வழியாக விழுங்கவும்.
- முடிந்தளவு சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைக்கவும்.
- பின்பு தொண்டை வழியாகவே சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறைகள் செய்யவும்.
3. ம்ரு’த்ய-பஞ்ஜக ஆஸனம்,
அத ம்ரு’த்ய-பஞ்ஜகாஸனம்
ப்ரதம ஸேன ஸூதோ ஹோய டானை பக உசாய ஆகா நை ஆனை /
பஹுர பகதலீ கோ யோ ராகை கோர வாரலீ யா விதி தாகை // 154
வடீ ஆங்குல்யா லகதி ஆனே கரி காடீ ஜாடாந்தரி டானை /
தோஉ ஹாத பக பாஹரி ல்யாவை புனி தாகௌ ஐஸே டஹராவை //155
தசின கரகௌ பஹூசௌ ஜோஈ வாசா கர ஸௌ பகரை ஸோஈ /
மஸ்தக பூஸொம் லகதோ ராகை நாஸாத்ரிஷ்டி வசன நஹீ பாகை // 156
ஜோஇ கதோதீ லகை அதவா அன்ய ஜு வ்யாதி /
யா ஆஸன கே கீயேதே ததகின ஹோய ஸமாதி //157

செய்நுட்பம் - பின்புறம் சாய்ந்து மேல் நோக்கியவாறு படுத்துக் கொள்ளவும்.
- முழங்கால்களை மடக்கி கை அக்குல்களுக்கு அடியில் வைத்துக் கொள்ளவும்.
- செங்குத்தான நிலையில் கால்களை நிறுத்தவும்.
- கைகளைக் கோர்த்து பாதங்களின்மேல் போட்டுக்கொள்ளவும்.
- மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
4. ம்ரு’த்ய பஞ்ஜகாஸனத்தில் இருந்தபடியே
புயங்கமகும்பக:,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 487-490
செய்நுட்பம் - நாக்கை சற்று மேலே உயர்த்தி கொஞ்சம் முன்னால் நீட்டி, சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- நாக்கை உள்ளிழுத்துக் கொள்ளவும்.
- சுவாசத்தை முடிந்தளவிற்கு உள்ளே நிறுத்தவும்.
- எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறைகள் செய்யவும்.
5. நாகீபாவ ஆஸனம்,
அத நாகீபாவ ஆஸனம்
பூரப விதி பரி ஆகானை நீசௌ ஹௌஈ கஹூணீ பணா ஸ்யௌ லகாஈ /
ஹாத ஆகானை தரதீ லகாவை பஸாரி தோஊ ஹாத கீ அஞ்ஜூலீ கரை //
பூ யடீ பரி லகாவை த்ரிஷ்டி நாஸாஅக்ர ஆஸண கௌ குண ஸரிர பிதா ஜாஈ //
செய்நுட்பம் - கால்களை நீட்டி உட்காரவும்.
- முழங்கால்களைப் பக்கவாட்டில் வைத்து இரு பாதங்களில் அடிப்பாகத்தையும் சேர்த்து வைக்கவும்.
- முன் பக்கம் குனிந்து முழங்கைகளைக் கால்களின் மீது வைக்கவும்.
- முன்னங்கைகளைத் தரையில் நீட்டவும்.
- உள்ளங்கைளில் சந்து ஏற்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
- மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
6. நாகீபாவ ஆஸனத்தில் இருந்தபடியே
த்ராடககும்பக:,
ஜோக ப்ரதீபிகா,ஸ்லோகங்கள் 491-493
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் அமரவும்.
- நாக்கை மேல் அண்ணத்தில் மடித்து வைத்துக் கொள்ளவும்.
- சுவாசத்தை இரு நாசிகளின் வழியாக உள்ளிழுக்கவும்.
- சுவாசத்தை உள் நிறுத்தி, தொண்டையைச் சுருக்கி, தாடையை நெஞ்சின்மீது வைக்கவும்.
- முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்தவும்.
- மேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது தாடையைத் தளர்த்தி, இரு நாசிகளின் வழியாக வெளிவிடவும்.
- இதை 21 முறைகள் செய்யவும்.
7. நக்ர ஆஸனம்,
அத நக்ர ஆஸனம்
ப்ரதம பதம ஆஸன கோ டானே தோஉ ஹாத பாசா னே ஆனே /
பாத அங்குடா பகடே ஆணி ஸோவை கஹூண்யா கூல்யா பாணி // 351
கோடா ஜங்க அக்ர கோ தாகே மஸதக ஸோ ஸம ஸூதோ ராகே /
நாஸா அக்ர த்ரிஷ்டி கோ தரே ஆஸன நக்ர ஈஸீ விதி கரை // 352
நாஸா ரோகு ஜுனா ரஹை விஸாலீ பினஸ ஜோய /
ஜுகாம ஆதிக ஸப ஹரை நக்ராஸன குண ஸோய // 353
செய்நுட்பம்- வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
- கைகளை முதுகின் பின்னால் கட்டிக் கொள்ளவும்.
- பின்னால் சாய்ந்து படுத்துக்கொள்ளவும். முழங்கால்கள் தரையைத் தொட்டவாறே இருக்கட்டும்.
- மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
8. நக்ர ஆஸனத்தில் இருந்தபடியே
சூ’ன்யககும்பக:,
ஸௌர புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள்
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் அமரவும்.
- சுவாசத்தை முழுமையாக வெளிவிடவும்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்தவும்.
- உச்சந்தலையில் நிலா இருப்பதாக பாவனை செய்யுங்கள்.
- அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யவும்.
- உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுக்கவும்.
- இதை 21 முறைகள் செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.