நினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய
Cure For Memory Problems
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- வீராஸனம்
- நாதகும்பகம்
- திரிநேத்ரகும்பகம்
- த்ரிசூ’லகும்பகம்
1.வீராஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 17 (விரிவாக்கு)
அத வீராஸனம்
ஏகபாதமதைகஸ்மின் வின்யஸேதூருஸம்ஸ்திதம்/
இதரஸ்மிம்ஸ்ததா பச்’சாத்-வீராஸனமிதீரிதம் // 17
மொழிபெயர்ப்பு
ஒரு காலை மடித்து அதன்மேல் அமர்ந்து கொண்டு, மடித்தகாலின் தொடையின் மேல் மறுகாலை மடித்து உட்காருவது வீராஸனம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- இடது காலை மடித்து, அதன் மேல் இடது பிருஷ்டம்படும்படி உட்கார்ந்து கொள்ளவும்.
- வலது பாதத்தை இடது தொடையின்மீது வைக்கவும்.
- கைகளைச் சின் முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைத்துக்கொள்ளவும்.
- இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
2.வீராஸனத்தில் இருந்தபடியேநாதகும்பக:, ஹட ஸங்கேத சந்த்ரிகா (விரிவாக்கு)
மொழிபெயர்ப்பு
பத்மாஸனத்தில் அமர்ந்து, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். நீண்ட நேரம் உச்சரித்தால் மட்டுமே நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம் பிரம்மரந்திரத்தை அடையும்.
செய்நுட்பம்
- பத்மாஸனத்தில் இருந்தபடியே ஓம்கார மந்திரத்தை நீண்ட நேரம் மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம், அனாஹதம், விசுத்தி, ஆஜ்ஞா சக்கரங்கள் வழியாகப் பயணம்செய்து ஸஹஸ்ரார சக்கரத்தை அடைவதை உணருங்கள்.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை உள்ளிழுக்க முடியாதபோது, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை வெளியேற்றவும்.
- இதை 21முறை செய்யுங்கள்.
3.வீராஸனத்தில் இருந்தபடியே,த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு)
அத த்ரிநேத்ரகும்பக:
ஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதை 21முறை செய்யுங்கள்.
4.வீராஸனத்தில் இருந்தபடியே
த்ரிசூ’லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193 (விரிவாக்கு)
அத த்ரிசூ’லகும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறை செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.