விளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1
Excelling In Sports - Level 1
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ (Two-way Video conferencing) அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- பத்மாஸனம்
- கபாலபாதி ப்ராணாயாமம்
- லஹரி ப்ராணாயாமம்
- அந்தோலி ப்ராணாயாமம்
1. பத்மாஸனம்,
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33(விரிவாக்கு) அத பத்மாஸனம்
உத்தானௌ சரணௌ க்ரு’த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு’த்வா து தாத்ரு’சௌ’ // 2.31
த்ரு’ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச’னை: // 2.32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச’னம் /
துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33
மொழிபெயர்ப்பு
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாஸனம் என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)

செய்நுட்பம்- கால்களை நீட்டி தரையில் அமருங்கள்.
- வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
- இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
- வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும்.
- மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
- முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
- இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
- முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமருங்கள்.
2. பத்மாஸனத்தில் இருந்தபடியே
கபாலபாதி ப்ராணாயாமம்,
யோக ரஹஸ்யம்-முதல் அத்யாயம்-ஸ்லோகம்-100
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் நிமிர்ந்து உட்காரவும்.வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடுங்கள்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
- உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
- இதை 7 நிமிடங்கள் செய்யவும்.
3. பத்மாஸனத்தில் இருந்தபடியே
லஹரி ப்ராணாயாமம்,
யோக ரஹஸ்யம்-முதல் அத்யாயம்-ஸ்லோகம்-100
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- ஒரு நாசி வழியாக சிறு அளவு (Short Inhalation) சுவாசமாக உள்ளிழுங்கள்.
- பிறகு மற்றொரு நாசி வழியாக, சிறு அளவு (Short Inhalation) சுவாசமாக வெளிவிடுங்கள்.
- இதை 3 நிமிடங்கள் செய்யவும்.
4. பத்மாஸனத்தில் இருந்தபடியே
அந்தோலி ப்ராணாயாமம்,
யோக ரஹஸ்யம்-முதல் அத்யாயம்-ஸ்லோகம்-100
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- நாக்கைக் குழாய்போல் மடிக்கவும்.
- வாய், மூக்கு இரண்டின் வழியாகவும் சுவாசிக்கவும்.
- முழுமையாகச் சுவாசித்து முடித்தவுடன் நாக்கை உள்நோக்கி இழுத்து, மேல் அண்ணத்தைத் தொடும்படி வைக்கவும்.
- எவ்வளவு நேரம் சுவாசத்தை உள்அடக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- உங்களால் இனியும் உள்அடக்க முடியாது எனும்போது மெதுவாக சுவாசத்தை மூக்கின் வழியாக வெளிவிடுங்கள்.
- இதை 7 நிமிடங்கள் செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.