தோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட
Cure For Skin Problems
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- பத்மாஸனம்
- கதாகும்பகம்
- தத்வகும்பகம்
- ஸூர்யபேதனகும்பகம்
- சந்த்ரபேதனகும்பகம்
- உஜ்ஜாயீகும்பகம்
1. பத்மாஸனம்,
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33 (விரிவாக்கு)
அத பத்மாஸனம்
உத்தானௌ சரணௌ க்ரு’த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு’த்வா து தாத்ரு’சௌ’ // 2.31
த்ரு’ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச’னை: // 2.32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச’னம் /
துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33
மொழிபெயர்ப்பு
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)
செய்நுட்பம்- வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
- இப்பொழுது இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
- வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும்.
- மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
- முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுக்கவும்.
- இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
- முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமரவும். கைகளைத் தளர்வாக வைக்கவும்.
2.பத்மாஸனத்தில் இருந்தபடியேகதாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112 (விரிவாக்கு)
அத கதாகும்பக:
உபாப்யாம் பூரணம் யத்ர ரேசனம் ஸூர்யவர்த்மனா /
கதாகும்ப: சி’வேனோக்தோ யோகீனோ பலகாரக: // 112
மொழிபெயர்ப்பு
இரு நாசிகள் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, பின்பு வலது நாசி வழியே சுவாசத்தை வெளிவிடுவது கதாகும்பகம் எனப்படும். இது யோகியை உறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.
செய்நுட்பம்
- இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- சுவாசத்தை முடிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாசிகளையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
- இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, வலது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறை செய்யவும்.
3. பத்மாஸனத்தில் இருந்தபடியே
தத்வகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 122 (விரிவாக்கு)
அத தத்வகும்பக:
தத்வாதௌ பூராயேத்வாயும் தத்தத்வாந்தே விரேசயேத் / 122
மொழிபெயர்ப்பு
ஒருவர், ஒரு குறிப்பிட்ட தத்துவம் எழும் முன்னர் சுவாசத்தை உள்ளிழுத்து, தத்துவத்தின் முடிவில் சுவாசத்தை வெளிவிட வேண்டும். இது தத்வ கும்பகமாகும்.
செய்நுட்பம்
- மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்தவும்.
- சுவாசத்தை உள்ளே நிறுத்தும்போது, உங்கள் தோல் குணமடைவதாக பாவனை செய்யுங்கள்.
- உங்கள் மொத்தத் தோல் பகுதியும் குணமடைந்துவிட்டதாக பாவனை செய்யுங்கள். இந்த பாவனையே தத்வம் எனப்படுகிறது.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது மெதுவாக வெளிவிடவும்.
- இதனை 21 முறை செய்யவும்.
4.பத்மாஸனத்தில் இருந்தபடியே
ஸூர்யபேதனகும்பக:,கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 126-127 (விரிவாக்கு)
அத ஸூர்யபேதனகும்பக:
தினேச’வர்த்மனாக்ரு’ஷ்ய பாஹ்யவாயும் ஸச’ப்தகம் /
யாவத் ஹ்ரு’த்கண்டயோக: ஸ்யாதானகாக்ரசி’காக்ரகம் // 126
பூரயித்வா யதேஷ்டம் தம் கும்பிதம் சேடயா த்யஜேத் /
ஸூர்யபேதாக்ய-கும்போண்யம் புன: புனரிமம் சரேத் // 127
மொழிபெயர்ப்பு
ஒருவர், தொண்டைக்குழி நிரம்பும்வரை, வலப்புற நாசி வழியாகச் சுவாசத்தைச் சப்தத்துடன் உள் இழுத்து, எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்தி, பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த ஸூர்ய பேதன கும்பகத்தை மீண்டும் மீண்டும் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டும்.
செய்நுட்பம்
- தொண்டைக்குழி நிரம்பும்வரை வலப்புற நாசி வழியாகச் சுவாசத்தை அதற்குரிய சப்தத்துடன் உள் இழுக்கவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்தவும்.
- பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிடவும்.
- இதை 21 முறை செய்யவும்.
5. பத்மாஸனத்தில் இருந்தபடியே சந்த்ரபேதனகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 126-128 (விரிவாக்கு)
அத சந்த்ரகும்பக:
தினேச’வர்த்மனாக்ரு’ஷ்ய பாஹ்யவாயும் ஸச’ப்தகம் /
யாவத் ஹ்ரு’த்கண்டயோக: ஸ்யாதானகாக்ரசி’காக்ரகம் // 126
பூரயித்வா யதேஷ்டம் தம் கும்பிதம் சேடயா த்யஜேத் /
ஸூர்யபேதாக்ய-கும்போண்யம் புன: புனரிமம் சரேத் // 127
அநேந விதினா சந்த்ர-நாட்யோக்தச்’-சந்த்ரபேதத: // 128
மொழிபெயர்ப்பு
ஒருவர், தொண்டைக்குழி நிரம்பும்வரை, சுவாசத்தை வலப்புற நாசி வழியாகச் சப்தத்துடன் உள் இழுத்து, எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்தி, பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த ஸூர்ய பேதன கும்பகத்தை மீண்டும் மீண்டும் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டும். இதையே சுவாசத்தை இடப்புற நாசி வழியாகச் சப்தத்துடன் உள் இழுத்துச் செய்தால் சந்த்ரபேதனகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- தொண்டைக்குழி நிரம்பும்வரை இடப்புற நாசி வழியாகச் சுவாசத்தை அதற்குரிய சப்தத்துடன் உள் இழுக்கவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்தவும். பின் வலது நாசி வழியாக மெதுவாக வெளிவிடவும்.
- இதை 21முறை செய்யுங்கள்.
6.பத்மாஸனத்தில் இருந்தபடியே
உஜ்ஜாயீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132 (விரிவாக்கு)
அத உஜ்ஜாயீகும்பக:
முகம் நியம்ய நாடீப்யாமாக்ரு’ஷ்யாஸும் நியோஜயேத் /
குண்டலீ-பார்ச்’வயோ: பச்’சாத் கும்பயேதுதர-ஸ்திதம் //131//
ரேசயேதிடயா வாயும் கச்சன்-திஷ்டன்-யதா சரேத் /
உஜ்ஜாயீ-கும்பக: ப்ரோக்த: சி’வேநாகில-வேதினா //132//
மொழிபெயர்ப்பு
வாயை மூடிக்கொண்டு இரு நாசிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளிழுத்து நாசியையும் வாயையும் மூடி சுவாசத்தை குண்டலினியுடன் உள்ளேயே வைத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் உஜ்ஜாயீ கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- விரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்தவும்.
- மெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறை செய்யவும்.
சிறிது நேரம் தளர்வாக அன்க்ளட்சிங் மனநிலையோடு அமரவும். இந்தக் கிரியா செய்யும்போது உடம்பில் வெப்பம் அதிகமாக உருவாகும்.ஆகையால் உடம்பைக் குளிர்விக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் அருந்தவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.