மூட்டுவாத நோய் தீர
Cure For Arthritis
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ (Two-way Video conferencing) அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- அர்த பத்மாஸனம்
- பூத சு’த்திகும்பகம்
- ப்ராமரீகும்பகம்
- அந்தரங்ககும்பகம்
- பஸ்த்ரிகாகும்பகம்
1. அர்த பத்மாஸனம்,
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33
(பத்மாஸனத்தில் ஒரு பாதி மட்டுமே செய்வது அர்த பத்மாஸனம் (விரிவாக்கு) அத பத்மாஸனம்
உத்தானௌ சரணௌ க்ரு’த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு’த்வா து தாத்ரு’சௌ’ // 2.31
த்ரு’ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச’னை: // 2.32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச’னம் /
துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33
மொழிபெயர்ப்பு
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாஸனம் என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)

செய்நுட்பம்- கால்களை நீட்டி தரையில் அமருங்கள்.
- வலது காலை மடித்து இடது தொடையின் மீது வைக்கவும்.
- இப்பொழுது இடது காலை மடித்து வலது தொடையின் கீழ் வைக்கவும்.
- மூக்கின் நுனிப் பகுதியைக் கவனிக்கவும்.
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, தொடைகளின் மீது வைத்துக்கொள்ளவும்.
- இந்த ஆஸனத்தில் 30 நொடிகள் இருக்கவும்.
2. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
பூத சு’த்திகும்பக:,
அத பூத சு’த்திகும்பக:
மாத்ரா: ஷோடச’பூரே ஸ்யுச்’சது:ஷஷ்ட்யஸ்து கும்பகே /
த்வாத்ரிம்ஸத்ரேசகே ப்ரோக்தா: மாத்ராகும்ப: ஸமீரித: // 153
மாத்ராகும்போ ஹ்ரு’தி க்ரு’த: சோ’ஷக: ஸம்ப்ரகீர்தித: /
தாஹனோ நாபிஸம்ஸ்தானோ மாத்ராகும்ப: பிரகீர்தித: // 154
ஸ்வாதிஷ்டானானுகச்’சாயம் ப்லாவனோண்ம்ரு’தஸேசன: /
மூலாதாரே க்ரு’தச்’சாயம் கடினீகரணோ மத: // 155
புன: கண்டானுகோ பஞ்ச வியூஹன: ஸ்யாத் ஸ கும்பக: /
ப்ரஹ்மஸ்தானநியோகேன முக்தித: பரிகீர்தித: // 156
ருத்வா கோனாயுகம் குர்யாத்யுகபத்யதி ஷட்க்ரமாத் /
பூதசு’த்திரிதி ப்ரோக்த ஆதிநாதேன ச’ம்புனா // 157
மொழிபெயர்ப்பு
16 மாத்திரைகள்வரை சுவாசத்தை உள்ளிழுத்து, 64 மாத்திரைகள்வரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, 32 மாத்திரைகள்வரை சுவாசத்தை வெளியேற்றும் இக்கும்பகம் மாத்ராகும்பகம் எனப்படுகிறது. (153)
இந்த மாத்ரா கும்பகத்தை இருதய ஸ்தானத்தில் பயிற்சி செய்யும்போது உடலைத் தாண்டிய உணர்வுநிலைக்குள் மூழ்கடிக்கிறது; நாபி ஸ்தானத்தில் பயிற்சி செய்யும்போது வெப்பத்தை உருவாக்குகிறது. (154)
ஸ்வாதிஷ்டான ஸ்தானத்தில் பயிற்சி செய்யும்போது அமுததாரையை பெருக்குகிறது; மூலாதார ஸ்தானத்தில் பயிற்சி செய்யும் ஒருவர் உறுதித்தன்மையை அடைகிறார். (155)
தொண்டை ஸ்தானத்தில் பயிற்சி செய்யும்போது பஞ்ச பூதங்களும் சமனப்படுகிறது; பிரம்மரந்திரத்தில் பயிற்சி செய்யும்போது, அது மோக்ஷத்தை நோக்கி அழைத்து செல்கிறது. (156)
ஆதிநாதனான சம்புநாத் சொற்படி, ஒரே சமயத்தில் (மேற்சொன்ன) 6 ஆதாரங்களிலும் ஒன்றன்பின் ஒன்றாகக் கும்பகம் பயிற்சி செய்யப்படுமானால், அது பூதங்களை சுத்தி செய்ய வழிவகை செய்யும். (157)
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் நிமிர்ந்து உட்காரவும்.
- 16 மாத்திரைகள்வரை சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- 64 மாத்திரைகள்வரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள்நிறுத்தும்போது உங்கள் விழிப்புணர்வை முறையே இருதயம், நாபி, ஸ்வாதிஷ்டானம், மூலாதாரம், தொண்டைப்பகுதி மற்றும் ஆஜ்ஞா என அடுத்தடுத்து குவிக்கவும்.
- 32 மாத்திரைகள்வரை சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 7 நிமிடங்கள் செய்யவும்.
3. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
ப்ராமரீகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-169 (விரிவாக்கு)
அத ப்ராமரீகும்பக:
அலிச’ப்தயுதம் வேகாத் பூரயேத் கும்பயேத்-தத: /
ஸாலிச’ப்தாச்சனை ரேகாத் ப்ராமரீகும்பகோ முனே: // 169
மொழிபெயர்ப்பு
ஆண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து, சுவாசத்தை உள் அடக்கி, பின் பெண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வெளிவிடுங்கள். இது ப்ராமரீகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- ‘ம்’ என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை வேகமாக உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- ‘ம்’ என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை அழுத்தமாகவும் மெதுவாகவும் வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யவும்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
4. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
அந்தரங்ககும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 168 (விரிவாக்கு)
அத அந்தரங்ககும்பக:
ஸக்ரு’த் ரேச-பூராப்யாம் கும்போண்யம் சாந்தரங்கக: // 168
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளிழுத்த உடனேயேயும் வெளிவிட்ட உடனேயேயும் சுவாசத்தை நிறுத்துவது அந்தரங்ககும்பகம்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசிகள் வழியாக சுவாசத்தை வெளியேற்றியதும் உடனடியாக சுவாசத்தை வெளியேயே நிறுத்துங்கள்.
- முடிந்த அளவு வெளியேயே நிறுத்திய பிறகு, சுவாசத்தை இரு நாசிகள் வழியாக உள்ளிழுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து முடித்ததும் உடனடியாக சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- முடிந்த அளவு உள்ளேயே நிறுத்திய பிறகு சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யவும்.
5. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியேபஸ்த்ரிகாகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 75-77 (விரிவாக்கு) அத பஸ்த்ரிகாகும்பக
பஸ்த்ரைவ லௌஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் /
ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 5.75
ஏவம் விம்ச’திவாரம் ச க்ரு’த்வா குர்யாச்சகும்பகம் /
ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76
த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸுதீ: /
ந ச ரோகோ ந ச க்லேச’ ஆரோக்யம் ச தினே தினே // 5.77
மொழிபெயர்ப்பு
கொல்லனின் உலைக்களத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளிவிடுங்கள். (5.75)
இவ்வாறு 20 முறை செய்யவும். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளிவிடுங்கள். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
- சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யவும்.
- 21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். உங்களால் இனி முடியாது எனும்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளிவிடுங்கள். (2லிருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
- இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.